அழகியல் கல்விச் செயற்பாடுகள் ஊடாக வளரும் மனவமைவு (Growth Mindset through Aesthetic Education Activities)

சவால்களை எதிர்கொள்ளவும் தடைகளை களைவதில் விடாமுயற்சியுடன் ஈடுபடவும் இறுதியாக தனிப்பட்ட வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் அடைந்துகொள்வதற்கு தனியாட்களை ஊக்குவிப்பதற்காக அழகியல் கல்விச் செயற்பாடுகள் அமைகின்றன. இதனூடாக வளரும் மனவமைவினை (Growth Mindset ) அபிவிருத்தி செய்தல் பிரதான செயற்படாக அமைகின்றது. படைப்பாற்றலை, நுண்ணாய்வுச் சிந்தனையை மற்றும் மனவெழுச்சி நுண்ணறிவைத் தூண்டும் கட்புலக் கலைகள், சங்கீதம், நடனம் மற்றும் அரங்கம் போன்றச் செயற்பாடுகள் அழகியல் கல்வியில் உள்ளடங்குகின்றன.


அழகியல் கல்விச் செயற்பாடுகள் ஊடாக வளரும் மனவமைவினை அபிவிருத்தி செய்வதற்கு சில படிமுறைகள் கீழே தரப்படுகின்றன.

1. உகந்ததும் சாதகமாக அமையக்கூடியதுமான சூழல் ஒன்றை விருத்தி செய்தல் (Create a positive and supportive environment) अ ஊக்குவிக்கப்படும். மற்றும் விருத்தியடைவதற்கான முயற்சியின் பெறுமதி வலியுறுத்தப்படும் ஒரு சந்தர்ப்ப சூழமைவை உருவாக்குதல். கற்றலின் போது தவறுகள் ஏற்படுவதும் பின்னடைவுகள் ஏற்படுவதும் கற்றல் செயன்முறையின் இயற்கையான அம்சங்களாகும் என்பது வலியுறுத்தப்படுகிறது.

2. பல்வேறுபட்டக் கலை வடிவங்களை அறிமுகஞ் செய்தல் (Introduce diverse forms of art): தனியாட்கள் தமது விளக்கத்தையும் பல்வேறு வகைப்பட்ட படைப்பாற்றல் வடிவங்களைப் போற்றுதலை விரிவுபடுத்துவதற்கு அவர்கள் விரிவான கலாசார ஒழுக்கம் மற்றும் கோலங்கள் அல்லது பாணிகள் என்பனவற்றை வெளிப்படுத்தச் இடமளிக்க வேண்டும். பல்வேறு ஊடகங்கள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி அவர்களை ஆராய்விலும் பரிசோதனைகளிலும் ஈடுபடுவதை ஊக்குவித்தல்

3. கற்றற் செயன்முறைகளை வலியுறுத்துதல்: (Emphasize the learning process) கலைப்படைப்புகளை மேற்கொள்வது கற்றலின் இறுதிப் பேறாக அமைதல் வேண்டும். தனியாட்கள் சவால்களை எதிர்கொண்டமை, அவர் எதிர்கொண்ட இடர்களையும் சவால்களையும் வெற்றிகொள்ள பயன்படுத்திய செயலுபாயங்கள் மற்றும் தமது முன்னேற்றம் பற்றிய பிரதிபலிப்புகளில் ஈடுபட ஊக்குவித்தல், என்பன இதிலடங்கும். விடாமுயற்சியின் பெறுமதியையும், முயற்சி மற்றும் பிரயோகச் செயற்பாடுகள் ஊடாக அபிவிருத்திச் செய்யப்படும் திறன்களையும் சிந்தனைகளையும் கோடிட்டுக் காட்டுதல் வேண்டும்.

வளர்ச்சியடைந்த மனவமைவு ஒன்றை அபிவிருத்தி செய்தல் ஒரு தொடர் செயன்முறையாவதுடன் அதற்கு நிலைத்திரு வலுவூட்டலும் ஆதரவும் தேவை. தேடிக்கண்டறிதல், பிரதிபலிப்பு ஆகியன முயற்சியிலும் அபிவிருத்தியிலும் அக்கறை செலுத்துதலை மேம்படுத்தும். அழகியல் கல்விச் செயற்பாடுகளை இணைத்தலின் மூலம் தனியாட்கள் வளரும் மனவமைவினை வளர்க்கவும் அவர்களது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் அவற்றைப் பிரயோகிக்கக் கூடியதாகவும் இருக்கும்.

கலையையும் எம்மைச் சூழவுள்ள உலகத்தையும் ஆழமாக விளங்கிக் கொள்ளவும் போற்றவும் மிகவும் பலமிகு வழியாக யதார்த்த உலக அனுபவங்களுடன் கலையை ஒன்றிணைத்தல் என்பது கருதப்படுகிறது. 


இந்த இணைப்பை தாபிப்பதற்கான செயலுபாயங்கள் சில கீழே தரப்பட்டுள்ளன:

1. கலையை தனிப்பட்ட அனுபவங்களுடன் தொடர்புபடுத்துக: (Relate art to personal experiences) தனியாட்களின் வாழ்க்கையுடன் கலை எந்தளவுக்கு தொடர்புபடுகின்றது என்பதை தேடியாராய அவர்களை ஊக்குவிக்குக. ஒரு குறிப்பிட்டக் கலை அல்லது அழகியல் கருப்பொருள் அவர்களது தனிப்பட்ட அனுபவங்களுடன் எதிரொலித்தல் மனவெழுச்சிகளை, ஞாபகங்கள் என்பனவற்றுடன் பிரதிபலிப்புச் செய்ய ஊக்குவிக்க கலையின் மீதான விளக்கத்தையும் போற்றுதலையும் மேம்படுத்த இந்த தனிப்பட்ட இணைப்பு உதவியாக இருக்கும்.

2. சமூக மற்றும் கலாசார சூழமைவுகளை தேடியாராய்தல்: (Explore social and cultural contexts): கலைப்படைப்புகள் உருவாக்கப்பட்ட வரலாற்று, சமூக, மற்றும் கலாசார சூழமைவுகளை கலந்துரையாடுக. சமூகப் பிரச்சினைகள், கலாசார விழுமியங்கள். மற்றும் அரசியல் நிகழ்வுகள் போன்றனவற்றையும் கவனத்தில் கொண்டு, தனியாட்கள் தம்மைச் சூழவுள்ள உலகை கலைப் படைப்புகள் பிரதிபலிக்கின்றது. துலங்கல்களைக் காட்டுகிறது என்பதை விளங்கிக்கொள்ளச் செய்கிறது. இது பல்வகை முன்நோக்குகள் பற்றி பெறுமதிமிக்க விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள உதவுவதுடன், பரிவுணர்வு மற்றும் நுண்ணாய்வுச் சிந்தனையையும் ஊக்குவிக்கும்.

3. சமகால நிகழ்வுகளுடன் கலையை இணைத்தல்: சமகால எழுவினாக்களுடன் (issues) மற்றும் நிகழ்வுகளுடன் கலை எவ்வாறு ஊடறுத்துள்ளது என்பதையிட்டு கலந்துரையாடல்கள், பகுப்பாய்வுகள் என்பனவற்றில் ஈடுபடுவதை ஊக்குவியுங்கள். கலைஞர்கள் தமது கலைப் படைப்புகள் மூலம் சமூக, சூழல் அல்லது அரசியல் விடயங்களுக்கு தமது துலங்கல்களைக் காட்டுவதுடன் கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர் என்பதை தேடியறிதலில் ஈடுபடச் செய்க. நாம் வாழும் உலகு பற்றிய அர்த்தமுள்ள கலந்துரையாடலில் ஈடுபடச் செய்வதுடன், விளங்கத்தையும் ஈடுபாட்டையும் மேம்பாட்டையச் செய்கிறது.

4. அருங்காட்சியகம், காட்சிக்கூடங்கள், மற்றும் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடல்: கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள், போன்றனவற்றை பார்வையிட அருங்காட்சியகத்திற்கு. திரையரங்குகளுக்குச் செல்வதற்குத் திட்டமிடல் வேண்டும். தனியாட்கள் கலைப் படைப்புகளில் ஈடுபடவும், வினாக்கள் கேட்கவும், வழிநடாத்தப்பட்ட சுற்றுலாக்களில் அல்லது கலந்துரையாடல்களில் பங்குகொள்ளவும் ஊக்கமளிக்கவும். கலை எவ்வாறு யதார்த்த உலக நிலைமைகளுடன் இணைக்கப்படலாம் என்பதையும் நேரடியாக பார்த்து அனுபவத்தைப் பெறவும் இது உதவுவதுடன் புதிய நோக்குகளையும் தூண்டுவிக்கின்றது.

5. பல்வேறு பாடத் துறைகளில் கலையை பகுப்பாய்வு செய்க: ( Analyze art in different disciplines) இலக்கியம், திரைப்படம், சங்கீதம் அல்லது கலை வடிவங்கள் போன்ற மரபுரீதியிலான கலைகளுக்கு அப்பால் பல்வேறு பாடத்துறைகளில் கலை முன்வைக்கப்படுகின்றது என்பதை பகுப்பாய்வு செய்க. இந்த கலை வடிவங்கள் சமூக விழுமியங்கள், மனவெழுச்சி உந்துதல் மீது எவ்வாறு பிரதிபலிப்பைச் செய்கிறது மற்றும் கலாசார வெளிப்பாடுகளில் பங்களிப்பு செய்கிறது என்பதை பகுப்பாய்வு செய்வதுடன் அது பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபடுக. இந்தப் பாடத்துறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள கலை மூலகங்கள் மற்றும் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ள விதம் பற்றி இனங்காணவும் அவற்றை போற்றவும் தனியாட்களை ஊக்குவிக்குக.

6. பாடத்துறைகளுக்கிடையிலான இணைப்புகளை மேம்படுத்துக (Promote interdisciplinary connections) வேறு புலமைசார் பாடத்துறைகள் அல்லது தொழில் துறைக்கும் கலைக்குமிடையிலான இணைப்பை ஏற்படுத்துவதற்கு தனியாட்களை ஊக்குவிக்குக. உதாரணமாக. விஞ்ஞானம், தொழிநுட்பம், பொறியியல், கணிதம், அல்லது வியாபாரம் போன்ற பாடத்துறைகளில் கலை எவ்வாறு ஊடுருவியுள்ளது என்பதை பற்றி கலந்துரையாடுக. பல்வேறு சூழமைவின் போது கலையில் படைப்பாற்றல், பிரச்சினைத் தீர்த்தல், மற்றும் நுண்ணாய்வுச் சிந்தனை என்பன எவ்வாறு பிரயோகிக்கப்படலாம் என்பதை ஆய்வு செய்க.

7. கலையுணர்வைத் தூண்டும் செயற்றிட்டத்தில் ஈடுபடுக. (Engage in art-inspired projects) தனியாட்கள் தமது யதார்த்த வாழ்க்கை அனுபவங்கள் அல்லது எழுவினாக்களால் தூண்டப்பட்ட விடயங்களை மையமாகக் கொண்டு தமது சொந்தக் கலைப் படைப்புகளை உருவாக்குவதற்கு தூண்டுவிக்குக. கட்புலக் கலைகள், கவிதை எழுதுதல், இசையமைத்தல், அல்லது உருவங்களை வடிவமைத்தல் போன்றனவற்றை இதிலடங்கலாம். யதார்த்தமான வாழ்க்கை நிலைமைகளுக்கும் கலைக்குமிடையிலான இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் இத்தகைய செயற்றிட்டங்கள் தனியாட்கள் தமது எண்ணங்களை, மனவெழுச்சியை மற்றும் நோக்குகளை வெளிப்படுத்த இடமளிக்கின்றது.

8.  ஆக்கபூர்வமான பின்னூட்டலை வழங்கல் (Provide constructive feedback) ஆக்கபூர்வமான. வளர்ச்சியை மையமாகக் கொண்ட குறிப்பானதாக அமையும் பின்னூட்டல்களை வழங்கப்படல் வேண்டும். ஆற்றல்கள் அல்லது பிறவியிலேயே பெற்றுவந்த ஆற்றல்கள் மீது மாத்திரம் முழுமையாக மையப்படுத்தாமல், முயற்சிகள், செயலுபாயங்கள் மற்றும் மேம்பாடுகள் மீதும் கவனத்தைச் செலுத்துதல் வேண்டும். பின்னூட்டல்களை வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்குமான சந்தர்ப்பமாக கொள்ளுமாறு தனியாட்கள் ஊக்குவிக்கப்படல் வேண்டும்.

9. பிரதிபலிப்பையும் சுய வெளிப்பாட்டையும் ஊக்குவித்தல்: (Encourage reflection and self-expression) தனியாட்கள் தமது கலைத் தெரிவு அதனுடைய வியாக்கியானம் பற்றிய கலந்துரையாடலில் ஈடுபடல் வேண்டும். அவர்களுடைய சிந்தனைகள், மனவெழுச்சிகள். தமது கலைப்படைப்புகள் மூலம் கருத்துகளை வெளிப்படுத்தவும். சுயஅறிக்கை நம்பிக்கையையும் மேம்படுத்துதலை ஊக்குவித்தல் வேண்டும்.

10. இணைந்த செயற்றிட்டங்கள் (Collaborative projects) குழுக் கலைச் செயற்றிட்டங்கள் மூலம் அணியாக பணிபுரிதலையும் இணைந்து செயலாற்றலையும் ஊக்குவிக்க வேண்டும். தனியாட்கள் ஒன்றிணைந்து பணியாற்றல் ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக் கொள்ள. கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள பல்வேறுபட்டக் கோணங்களில் பார்ப்பதை ஆதரித்தலை ஊக்குவிக்கிறது. மேலும், இசைவாக்கம் பெறல், உடன்பாட்டுக்கு வருதல். என்பனவற்றுடன் விளைதிறனான தொடர்பாடலையும் ஊக்குவிக்கின்றது.

11. சாதனைகளையும் மைல்கற்களை அடைதலையும் கொண்டாடல் (Celebrate achievements and milestones): தனியாட்களின் முன்னேற்றத்தை மற்றும் பூர்த்திசெய்தலை அங்கிகரித்தலும் கொண்டாடுதலும் வேண்டும். அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி, முயற்சி, குறிப்பிட்ட காலத்தில் அடைந்த முன்னேற்றம் என்பனவற்றைக் கோடிட்டுக்காட்டல். இந்த வெற்றி என்பது நிரந்தரமானதல்ல ஆனால், அர்ப்பணிப்பாலும் தொடராக கற்றலாலும் அதை அடைய முடியும் என்ற கருத்தை வலுவூட்டுகிறது.

8. யதார்த்த உலக நிலைமைகளையும் கலையையும் இணைத்தல்: தனியாட்கள் அழகியல் கல்விச் செயற்பாடுகள் ஊடாக அபிவிருத்தி செய்துகொண்ட இடமாற்றத்தகு திறன்களை இனங்காணவும் அவற்றை வாழ்க்கையின் ஏனையத் துறைகளுக்கு பிரயோகிப்பதற்கும் உதவுதல் வேண்டும். எவ்வாறு கலைப்படைப்புசார் பிரச்சினைத் தீர்த்தல், படைப்பாற்றல் விரிதிறன் என்பனவற்றை கல்வி, வாண்மைத்துவ தனிப்பட்ட சூழமைவுகளில் பிரயோகிக்கலாம் என்பது பற்றி கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் வேண்டும்.


கலை செயன்முறையை உருவாக்குக. (Create art)

பல்வேறுபட்ட ஊடகங்கள், நுட்பங்களைப் பயன்படுத்தி உங்களது கருத்துகளை, மனவெழுச்சிகளை மற்றும் நோக்குகளை மற்றவர்களுக்கு கூற உதவும் தனிப்பட்ட வெளிப்படுத்தல் செயன்முறையே கலை உருவாக்கச் செயன்முறையாகும். கலை ஒன்றைப் படைக்க ஒரு சரியான வழிமுறை கிடையாது. ஒரு கலையைப் படைப்பதற்கு வழிகாட்டும் சில படிமுறைகள் இங்கு தரப்படுகின்றன:

1. உத்வேகமுடைய விடயத்தைத் தெரிக: உங்களைச் சூழ உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு விடயத்தைத் தெரிக. பல்வேறு கலை வடிவங்களை ஆராய்க. அருங்காட்சியகம், அரங்குகள் என்பனவற்றுக்கு விஜயம் செய்யுங்கள். நூல்களை வாசிக்குக. இசைக்கு செவிசாய்க்குக. இயற்கைச் சூழலில் நேரத்தை செலவு செய்க. உங்களது ஆக்கத்திறனால் வெளிப்படுத்தக்கூடிய சிந்தனை.கருப்பொருள் அல்லது உங்களில் எதிரொலிக்கும் எண்ணக்கரு ஒன்றைத் தெரிவு செய்துகொள்க.

2. உங்களது ஊடகத்தை தீர்மானிக்குக: உங்களது கலை நோக்குக்கு மிகவும் பொருத்தமான ஊடகம் ஒன்றை அல்லது ஊடகங்களின் சேர்க்கைகளைத் தீர்மானிக்கவும். பாடல்கள், சங்கீத உபகரணங்கள். உருவாக்கங்கள், அசைவுகள் அல்லது அபிநயங்கள். நாடகம், வரைதல், சிற்பம், எண்மானக் கலை (digital art) அச்சுப் பதிப்பு அல்லது தனது கருத்தை வெளிப்படுத்தும் வேறு ஏதாவது கலை வடிவமாக இருக்கலாம்.

3. உங்களது மூலப்பொருட்களை ஒன்றுசேர்க்கவும்: (Gather your materials) நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள ஊடகத்தை அடிப்படையாகக் கொண்டு தேவைப்படும் மூலப்பொருட்களை ஒன்றுசேர்க்கவும்.

4. சிந்தனைக் கிளறலும் திட்டமும்: உங்களது கலைப் படைப்புக்கான சிந்தனைக் கிளறல் கருத்துக்கும் எண்ணக்கருவுக்கும் குறிப்பிட்ட நேரத்தை செலவு செய்யவும். உங்களுடைய ஆக்கத்துக்காக, அதை காட்சிப்படுத்தும் வகையில் ஒரு வரைபை அல்லது மேலோட்டமான படம் ஒன்றை சித்தரிக்குக. உங்களது கலைப் படைப்பின் மூலம் சொல்ல விரும்பும் செய்தி,மனநிலை, அல்லது கதையை கவனத்தில் கொள்க.

5. ஆக்கத்தை தொடங்கவும்: உங்களது கருத்தை பௌதீக வடிவம் ஒன்றுக்கு மாற்றத் தொடங்குங்கள். உங்களை வழிகாட்ட உங்களது ஆக்க உள்ளுணர்வுக்கு இடமளியுங்கள். உங்களது தூரநோக்குக்கு உயிரூட்டும் பல்வேறுபட்ட நுட்பங்களையும் சேர்க்கைகளையும் பரிட்சிக்கவும். உங்களது பயணத்தில் தவறுகளும் புதிய பரீட்சித்தல்களும் அங்கங்களாகும். அதனால் சவால்களை எதிர்நோக்கவும் ஆக்கச் செயற்பாடுகளை கைவிடாமல் பின்பற்றவும் தொடங்குங்கள்.

5. கலைப்படைப்புகளை மதிப்பிடுக: உங்களது வியாக்கியானம் மற்றும் தனிப்பட்ட நியதிகளை அடிப்படையாகக் கொண்டு கலைப்படைப்புகளுக்கு மதிப்பீடொன்றை வழங்குக. அதனுடைய தொழினுட்பத் திறன்கள், அசலானத் தன்மை, படைப்பாற்றல் மற்றும் எண்ணங்களின் ஆழம் என்பனவற்றைக் கவனத்தில் கொள்க. கலைப் படைப்பொன்று தான் எதிர்பார்க்கும் செய்தியை எவ்வாறு கொண்டு செல்கிறது அல்லது பார்வையாளர்களின் துலங்கல் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது என்ற விடயத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் வெற்றியை பிரதிபலிப்புச் செய்க.

6. உங்களது விமர்சனத்தை ஆதாரத்துடன் தருக (Support your critique) கலைப்படைப்புகளை விமர்சிக்கும் போது அவற்றில் கண்டவற்றை சான்றாகவும் உதாரணமாகவும் முன்வைத்து விமர்சனம் செய்க. குறிப்பான கட்புல மூலகத்தை உசாத்துணையாகக் கொள்க அல்லது உங்களது பகுப்பாய்வு மற்றும் வியாக்கியானம் கூறுதலை வலுவூட்டும் விபரங்களை முன்வைக்குக. இது உங்களது விமர்சனத்துக்கு ஓர் அடிப்படையை வழங்க உதவுவதுடன் உங்களது ஆழமான பார்வைக்கு ஒரு நம்பகத்தன்மையைத் தருகிறது.

7. பல்வேறுபட்ட நோக்குகளை கவனத்தில் கொள்க: கலை என்பது அகவயத்தன்மையை அதிகம் கொண்டது என்பதை ஏற்றுக்கொள்ளவும். அதன் காரணமாக, வெவ்வேறுபட்ட பார்வையாளர்கள் வெவ்வேறுபட்ட வியாக்கியானத்தை அல்லது அபிப்பிராயங்களைக் கொண்டிருக்கலாம். மாற்று நோக்குகளையும் கவனத்தில் கொண்டு பல்வேறுபட்ட நோக்குகளுக்கு உங்கள் மனதை திறந்துவிடுங்கள். குறித்தக் கலைப் படைப்புகள் சம்பந்தமாக பல்வேறுபட்டக் கருத்துகளை, நோக்குகளைக் கொண்டிருப்பவர்களுடன் மரியாதையுடனான கலந்துரையாடலில் ஈடுபட்டு கருத்துகளை பகிரிந்துகொள்ளுங்கள்.

8. ஆக்கபூர்வமான பின்னூட்டல்களை வழங்குக. (Provide constructive feedback) உங்களது விமர்சனத்தை முன்வைக்கும் போது, அது வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் உதவுவதாக அமையும் வகையில் ஆக்கப்பூர்வமான பின்னூட்டல்களை வழங்குக. உங்களது கருத்தை முன்வைக்கும் போது, கலைப் படைப்புகளில் குறிப்பான அம்சங்களைச் சுட்டிக் காட்டி அதன் அபிவிருத்திக்கான, நடைமுறை சாத்தியமான விதந்துரைகளை நாகரிகமாகவும் தெளிவாகவும் இருக்கும் வகையில் மொழிப் பிரயோகங்களைப் பயன்படுத்தி உங்கள் பின்னூட்டல்களை வழங்குக.

கலை என்பது அகவயத்தன்மையுடையதுடன், ஒரு சரியான வியாக்கியானமோ மதிப்பீடோ அல்ல என்பதை ஞாபகத்தில் கொள்க. கலைப் படைப்புகள் மீதான விமர்சனத்தின் இலக்கானது. கலைப்படைப்பின் தரம், முக்கியத்துவம், அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்பன பற்றிய அர்த்தமுள்ள கலந்துரையாடலில் ஈடுபடுதலாகும். மேற் குறிப்பிட்ட படிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மற்றும் திறந்த மனதுடன் செயலாற்ற வரும் போது நீங்கள் உங்களது நுண்ணாய்வுச் சிந்தனைத் திறன்களை அபிவிருத்தி செய்து கொண்டு கலைப் படைப்புகள் பற்றி இடம்பெறும் கலந்துரையாடலில் ஆக்கபூர்வமான பங்களிப்பைச் செய்யலாம்.

கலைக்கும் யதார்த்த உலக அனுபவங்களுக்குமிடையில் செயற்பாடுகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் போது கலையின் முக்கியத்துவத்தையும் அதன் பொருத்தப்பாட்டையும் நாம் ஆழமாக விளங்கிக் கொள்ளலாம். இந்த இணைப்பானது நுண்ணாய்வுச் சிந்தனை, கலாசார விளக்கம் மற்றும் பரிவுணர்வு என்பனவற்றை மேம்படுத்துவதுடன், எமது வாழ்க்கையில் சமூகத்தின் மீது கலை ஏற்படுத்தும் தாக்கம் பற்றி போற்றிக் கதைப்பதையும் மேம்படுத்தும்.


கலை பற்றிய விமர்சனம்

பல்வேறு வகையிலான மூலகங்களை பகுப்பாய்தலும் மதிப்பிடலும், அழகியல் மற்றும் அதனுடைய அர்த்தம் என்பனவற்றை கலை பற்றிய விமர்சனம் உள்ளடக்கியுள்ளது. அவதானிப்பகள், சிந்தனை ரீதியிலான பிரதிபலிப்புகள், கருத்துகளைத் தெரிவிக்கும் ஆற்றல்கள் மற்றும் படைப்பாற்றலுடன் ஆழ்ந்து உட்கருத்தைப் பார்க்கும் விதம் என்பனவற்றை தேவைப்பாடுகளாகக் கொண்டதோர் செயன்முறை இதுவாகும். கலையை விமர்சனரீதியாகப் பார்ப்பதற்கு வழிகாட்ட உதவும் படிமுறைகள் சில கீழே தரப்பட்டுள்ளன.

1. அவதானித்துப் பின்னர் ஈடுபாட்டைச் செலுத்தவும் (Observe and engage) நன்கு நேரத்தை எடுத்து கவனமாக கலைப் படைப்புகளை அவதானிக்கவும். நிறங்கள், சேர்க்கைகள், கோடுகள், வடிவங்கள் மற்றும் எழுத்துகள் இழையமைப்புகள் (textures.) போன்ற கட்புலனாகும் மூலகங்களை நன்கு அவதானிக்கவும். சிந்தனைகள் கிளறப்படவும், உணர்வுகள் ஏற்படவும் மற்றும் வியாக்கியானம் கூறக்கூடிய வண்ணம் கலைப்படைப்புகளுடன் மனதை ஒருமுகப்படுத்தியும் அறிவுக்கூர்மையுடனும் பார்ப்பதில் ஈடுபடுக.

2. கலைப்படைப்புகளை புறவயமாக விபரிக்குக.: கலைப்படைப்புகளை நடுநிலையிலிருந்தும் புறவயமாகவும் விபரிக்கத் தொடங்குக. இது கலைப்படைப்புகளின் ஊடகம், அளவு, நுட்பங்கள், மற்றும் வேறும் அவதானிக்கக் கூடிய மூலகங்கள். அல்லது அதற்குள் இருக்கும் விடயங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டுதல் என்பன உள்ளடங்கும். பொதுவான விளக்கம் பெறவும் மேலதிக பகுப்பாய்வுக்கு அடித்தளமிடவும் இந்த படிமுறைகள் உதவுகின்றன.

3. முறைசார் மூலகங்களை பகுப்பாய்வு செய்தல்: நிறம், ஒளி, இடைவெளி, விகிதசமம் மற்றும் சமநிலை போன்றனவற்றின் பயன்பாடுகள் போன்ற கலைப் படைப்புகளின் முறைசார் மூலகங்களை பகுப்பாய்வு செய்க. முழுமையான கட்புல தாக்கம் மற்றும் அழகியல் அனுபவங்கள் மீது இத்தகைய மூலகங்கள் எவ்வாறு பங்களிப்புச் செய்கிறது என்பதைக் கவனத்தில் கொள்க. அவைகள் எவ்வாறு கலைஞனின் எண்ணங்களை அல்லது கருப்பொருளை ஆதரிக்கின்றன அல்லது கொண்டு செல்கிறது என்பதை பிரதிபலிக்குக.

4. கலைப்படைப்புகளுக்கு பொருள்கூறுக: கலைப்படைப்புகளின் பொருளை அல்லது வியாக்கியானத்தை உங்களுடைய அவதானிப்பு மற்றும் பகுப்பாய்வின் அடிப்படையில் கட்டியெழுப்புக. கலைஞனின் எண்ணப்பாடுகளை, வரலாற்று சூழமைவுகளை, கலாசார உசாத்துணைகளை அல்லது ஏதாவது முன்வைப்பாக அமையும் குறியீடுகளை கவனத்தில் கொள்க. உங்களுடைய சொந்த அனுபவங்கள் அல்லது அறிவை கருப்பொருளுடனும் கட்புல மூலகங்களுடனும் இணைக்குக.

5. மீண்டும் மீண்டும் செயற்படுதலைப் பின்பற்றவும்: கலைப் படைப்புகள் என்பது மீண்டும் மீண்டும் திருத்தியும் மாற்றியும் அமைக்கும் செயற்பாடாகும். உங்களுடைய பயணத்தில் மாற்றங்களுக்கும் சரிசெய்தலுக்கும் இடமளிக்குக. உங்களுடைய முன்னேற்றத்தை அடிக்கடி கணிப்பீடு செய்வதுடன். உங்களது விருத்திக்கான பகுதியை பிரதிபலிப்புச் செய்க. உங்களது கலைப் படைப்பு சிறப்பாக அமைய தேவையான மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்க

6. உண்மைநிலை என்பதை நீங்களே வெளிப்படுத்துக (Express yourself authentically); உங்களது தனித்துவமான குரல் மற்றும் நோக்குகளுடன் உங்களது கலைப்படைப்பை உட்புகுத்துக. உங்களது கலைத் தெரிவின் மூலம் உங்களது மனவெழுச்சி, சிந்தனைகள் அல்லது தனிப்பட்ட அனுபவங்களை வெளிப்படுத்துக. நீங்கள் தனியாள் மற்றும் ஒரு கலைஞன் என்பதை பிரதிபலிப்பதற்கு இடமளிக்குக.

7. பின்னூட்டலைப் பெறுதலும் பிரதிபலிப்பும்: உங்களது கலைப் படைப்பை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களுடைய பின்னூட்டல்களைப் பெறுக. உங்களைது கலைப்படைப்பு சம்பந்தமாக கலந்துரையாடலில் ஈடுபடல். பல்வேறு கோணங்களில் பார்வையை செலுத்துதல் மற்றும் அவர்களது பார்வை உங்களது கலைப் படைப்பை மேலும் விருத்திசெய்ய எவ்வாறு உதவும் என்பதை கவனத்தில் கொள்க. நீங்கள் உங்களது கலைப் படைப்பின் மூலம் என்ன கற்றுக் கொண்டீர்கள், உங்களுடைய செயற்பாடுகளை மேலும் முன்னெடுத்து ஒரு கலைஞனாக விருத்தியடையலாம்: வளரலாம் என்பதை பிரதிபலிப்புச் செய்யுங்கள்.

கலைப் படைப்பில் ஈடுபடல் என்பது தனிப்பட்டப் பயணமாவதுடன், அதற்கு சரியான அல்லது தவறான விடை கிடையாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும். நீங்கள் தேடியாராய்வதில், பரிசோதனைகளில் மற்றும் கலைப்படைப்புகளில் ஈடுபட்டு மகிழ்வடையுங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கலைப்படைப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு ஒரு சுதந்திரமான கலைஞனாக செயலாற்றுங்கள்.

Post a Comment

Previous Post Next Post